நாடாளுமன்ற வளாக கட்டிடத்தில் தீ விபத்து

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள இணைப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Update: 2020-08-17 02:58 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற வளாக கட்டித்தில்  இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள  இணைப்பு கட்டிடத்தின் 6-வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. 

தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும்  5 தீ அணைப்பு வாகனங்களில் வந்த தீ அணைப்பு வீரர்கள் தீயை  அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்