புதுச்சேரியில் இன்று மேலும் 407 பேருக்கு கொரோனா பாதிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 546 ஆக உயர்வு

புதுச்சேரியில் இன்று மேலும் 407 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 546 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-10-06 09:53 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில் புதுச்சேரியில் இன்று மேலும் 407 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,682 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 546 ஆக உயர்ந்துள்ளது. தற்போது இறப்பு விகிதம் 1.84 சதவீதமாக உள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 390 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,614 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 4,522 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்