காஷ்மீரில் பா.ஜ.க. தொண்டர் மீது பயங்கரவாதி துப்பாக்கி சூடு; போலீஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பா.ஜ.க. தொண்டர் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலில் போலீஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்து உள்ளார்.

Update: 2020-10-06 17:47 GMT
ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் கந்தர்பால் நகரில் நுனார் என்ற பகுதியில் பா.ஜ.க. தொண்டர் ஒருவர் மீது பயங்கரவாதி ஒருவன் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளான்.

இந்த சம்பவத்தில் அந்த தொண்டர் காயமின்றி உயிர் தப்பிவிட்டார்.  எனினும் தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் முகமது அல்டாப் என்பவர் காயமடைந்து சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார்.

இதனை காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்து உள்ளனர்.  துப்பாக்கி சூடு நடத்திய பயங்கரவாதியை போலீசார் சுட்டு கொன்றனர்.  பயங்கரவாதியை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்