மும்பையில் இன்று 1,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பையில் இன்று 1,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-10-24 15:03 GMT
மும்பை,

மும்பை மாநகராட்சி சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில், 1,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மும்பையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,50,061 ஆக அதிகரித்துள்ளது.

மும்பையில் இன்று ஒரே நாளில் 50 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 10,016 ஆக உயர்ந்துள்ளது. இன்று 898 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,19,152 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மும்பையில் 19,554 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்