நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தசரா வாழ்த்து
நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தசரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
தசரா பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “இந்த திருநாள் தொற்றுநோயிடம் இருந்து நம்மை பாதுகாத்து, நாட்டு மக்களுக்கு செழிப்பை அளிக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.