மராட்டியத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.3 ஆக பதிவு
மராட்டியத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
நாக்பூர்,
மராட்டியத்தில் நாக்பூரில் இருந்து வடக்கு-வடகிழக்கு பகுதியில் இருந்து 96 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 4.10 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இது ரிக்டரில் 3.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. அதிகாலை என்பதனால் இதனால் ஏற்பட்ட பொருளிழப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக தெரிய வரவில்லை.