கேரளாவில் இன்று மேலும் 5,537 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 5,08,256 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-11-12 14:38 GMT
திருவனந்தபுரம்,

கேரள மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கேரளாவில் இன்று புதிதாக 5,537 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,08,256 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 25 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 1,796 ஆக உயர்ந்துள்ளது. இன்று 6,119 பேர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை மொத்தம் 4,28,529 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 77,813 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்