அரியானா மாநில ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு

அரியானா மாநில ஆளுநர் சத்யதேவ் நாராயணன் ஆர்யா கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2020-11-16 15:59 GMT

அரியானா ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யாவுக்கு (81) கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, அவருக்கு  நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 பரிசோதனை முடிவில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்