குஜராத்தில் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரித்து வழங்கிய கும்பல் கைது

குஜராத்தில் கடந்த 7 ஆண்டுகளாக போலி மதிப்பெண் சான்றிதழ்களை தயாரித்து வழங்கிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2020-11-28 01:47 GMT
வதோதரா,

குஜராத்தின் வதோதரா பகுதியில் பல்வேறு பல்கலை கழகங்களின் போலியான மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் பட்டங்கள் ஆகியவற்றை கும்பல் ஒன்று தயாரித்து வழங்கி வந்துள்ளது.  இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கடந்த 7 ஆண்டுகளாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.  அந்த கும்பலிடம் இருந்து, போலி மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரிக்க உதவிய 3 கணினிகள் மற்றும் மின்னணு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.  போலியான சான்றிதழ்களையும் கைப்பற்றி உள்ளனர்.

இதனை தொடர்ந்து, அந்த பல்கலை கழகங்களில் பணிபுரிபவர்கள் யாரேனும் இந்த கும்பலுடன் தொடர்பில் உள்ளனரா என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்த இருக்கின்றனர்.

மேலும் செய்திகள்