காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்; முதற்கட்ட வாக்கு பதிவு இன்று தொடக்கம்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு இன்று தொடங்குகிறது.

Update: 2020-11-28 02:32 GMT
ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று நடைபெறுகிறது.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் இன்று முதல் வருகிற டிசம்பர் 19ந்தேதி வரை மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 22ந்தேதி நடைபெறும்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆக பிரிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் போட்டியிடுகின்றன.

இதேபோன்று தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, மக்கள் மாநாட்டு கட்சி மற்றும் சி.பி.ஐ. (எம்.) ஆகியவை முக்கிய கட்சிகளாக போட்டியிடுகின்றன.

இதில் காஷ்மீரில் 25 மற்றும் ஜம்முவில் 18 என மொத்தம் 43 தொகுதிகளுக்கு இன்று காலை முதற்கட்ட தேர்தல் நடைபறுகிறது.  இதனை முன்னிட்டு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், பலத்த பாதுகாப்புகளுடன் தேர்தல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

மேலும் செய்திகள்