கேரளாவில் மேலும் 6,268- பேருக்கு கொரோனா தொற்று

கேரளாவில் புதிதாக 6 ஆயிரத்து 268- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-12-30 17:58 GMT
புதுடெல்லி,

கேரளாவில் புதிதாக இன்று 6,268- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கேரள சுகாதாரத்துறை கூறியிருப்பதாவது:- கேரளாவில் இன்று  புதிதாக 6,268 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 7 லட்சத்து 55 ஆயிரத்து 719 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலி எண்ணிக்கை 3,042 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் இன்று ஒரே நாளில் 5,707 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். மொத்த எண்ணிக்கை 6,87,104 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் தற்போது 65 ஆயிரத்து 394 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

மேலும் செய்திகள்