புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடு; பெங்களூருவில் 144 தடை உத்தரவு
இங்கிலாந்து நாட்டில் புதிதாக உருவாகி உள்ள கொரோனா காரணமாக உலகம் முழுவதும் அச்சம் எழுந்துள்ளது.
பெங்களூரு,
கொரோனா காரணமாக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது. இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும் இங்கிலாந்து நாட்டில் புதிதாக உருவாகி உள்ள கொரோனா காரணமாக உலகம் முழுவதும் அச்சம் எழுந்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை பல்வேறு நாடுகள் மேற்கொள்ள தொடங்கி உள்ளன.
இந்தநிலையில், பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி கிடையாது என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. அதாவது, இன்று (டிச 31) முதல் நாளை அதிகாலை 6 மணி வரை பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.