ராஜஸ்தானில் இரவு நேர ஊரடங்கு ரத்து
ராஜஸ்தானில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜெய்சல்மார்,
ராஜஸ்தானில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் கொரோனா அதிகரித்தையடுத்து கடந்த நவம்பர் 21ஆம் தேதி முதல் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை எட்டு மாவட்டங்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைந்ததையடுத்து, ராஜஸ்தான் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.