இந்தியாவில் கடந்த 2 நாட்களாக புதிதாக உருமாறிய கொரோனா பாதிப்பு இல்லை: சுகாதாரத்துறை அமைச்சகம்

இந்தியாவில் கடந்த 2 நாட்களாக புதிதாக உருமாறிய கொரோனா பாதிப்பு இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-01-18 12:05 GMT
புதுடெல்லி,

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய புதிய கொரோனா தொற்று இந்தியாவிலும் தொடர்ந்து பலரிடம் உறுதி செய்யப்பட்டு வருகிறது. அங்கிருந்து நாடு திரும்பியவர்களிடம் நடத்தப்படும் பரிசோதனைகளில் இது உறுதியாகிறது. இந்தியாவில் இதுவரை 116- பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், நேற்றும் இன்றும் புதிதாக உருமாறிய கொரோனா பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் உருமாறிய  கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  116- ஆகவே நீடிக்கிறது. 

மேலும் செய்திகள்