காதலர் தினத்தில் 15 நக்சலைட்டுகளுக்கு திருமணம் செய்து வைத்த போலீசார்

சத்தீஷ்காரில் காதலர் தினத்தில் 15 நக்சலைட்டுகளுக்கு போலீசார் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

Update: 2021-02-15 01:30 GMT
ராய்ப்பூர்,

சத்தீஷ்காரில் தன்டேவாடா, சுக்மா நகரங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படும்.  இதனால் அவர்களை பிடித்து தருபவர்களுக்கு உரிய பரிசு தொகையும் அறிவிக்கப்படும்.

இந்த நிலையில், நக்சலைட்டுகளின் தலைக்கு பரிசு அறிவிக்கப்பட்டவர்களில் சிலர் தங்களுடைய ஆயுதங்களை போலீசில் ஒப்படைத்து விட்டு சரணடைந்தனர்.

அவர்களில் 15 பேருக்கு காதலர் தினத்தில் நேற்று தன்டேவாடா போலீசார் திருமணம் நடத்தி வைத்தனர்.  இதுபற்றி எஸ்.பி. அபிசேக் பல்லவ் கூறும்பொழுது, அனைவர் மீதும் தலைக்கு பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.  இவர்களை பிடித்து தருபவர்கள் அல்லது இவர்களது இருப்பிடம் பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு உரிய பரிசு வழங்கப்படும்.

கடந்த 6 மாதங்களில் இவர்கள் ஆயுதங்களை போட்டு விட்டு சரண் அடைந்தனர்.  அவர்களுடைய திருமணம் அவர்களது குடும்பத்தினர் முன்னிலையில் நடந்தது என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்