இந்தியாவில் 12,881 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 12,881 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை நாள்தோறும் பெருமளவில் குறைந்து வருகிறது. இதுபற்றி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 24 மணிநேரத்தில் 12,881 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.
இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 9 லட்சத்து 50 ஆயிரத்து 201 ஆக உயர்வடைந்து உள்ளது. 11,987 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 6 லட்சத்து 56 ஆயிரத்து 845 ஆக உயர்வடைந்து உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 101 பேர் கொரோனா பாதிப்புகளுக்கு உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரத்து 14 ஆக உயர்வடைந்து உள்ளது. நாடு முழுவதும் 1 லட்சத்து 37 ஆயிரத்து 342 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 94 லட்சத்து 22 ஆயிரத்து 228 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.