முன்னாள் மத்திய மந்திரி மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி

முன்னாள் மத்திய மந்திரி இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட ராகுல் காந்தி அவரது உடலை சுமந்து சென்றார்.

Update: 2021-02-19 21:40 GMT

புதுடெல்லி,

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்தவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கேப்டன் சதீஷ் சர்மா. அவர் 1993-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை மத்திய பெட்ரோலிய துறை மந்திரியாக பதவி வகித்தவர். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பரும் ஆவார்.

73 வயதான அவர் கோவாவில் வசித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் இறந்தார்.

அதனை தொடர்ந்து அவரது உடல் இறுதி சடங்குக்காக டெல்லி எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவரது இறுதி மரியாதையில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்ற ராகுல் காந்தி, சதீஷ் சர்மாவின் உடலை தூக்கி சென்று அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினார். மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சதீஷ் சர்மாவின் உடலை ராகுல்காந்தி தோளில் சுமந்து சென்ற சம்பவம் நிர்வாகிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

மேலும் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், “கேப்டன் சதீஷ் ஷர்மா இறந்தது குறித்து கேள்விப்பட்டு வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்