மராட்டியம்: அமராவதியில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு
மராட்டிய மாநிலம் அமராவதி மாவட்டத்தில் ஊரடங்கு மேலும் ஒருவாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்ததை அடுத்து அமராவதி, அச்சால்புர் ஆகிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பட்டு இருந்தது. பொது மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 வரை வெளியே வர அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் அங்கு அமலில் உள்ள ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமராவதி மாவட்ட கலெக்டர் சைேலஷ் நாவல் கூறுகையில்,
" அமராவதி, அச்சால்புர் மற்றம் அந்த நகரங்களையொட்டிய பகுதிகள் மற்றும் ஒட்டுமொத்த அஞ்சான்காவில் வருகிற 8-ந் தேதி வரை காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் " என்றார். இதேபோல நாக்பூர், புல்தானா, யவத்மால் ஆகிய பகுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.