கேரளாவில் இன்று மேலும் 2,938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் இன்று மேலும் 2,938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-03-02 14:57 GMT
திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு  அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இன்று மேலும் 2,938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் மாநிலத்தில்இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,63,987 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலியின் எண்ணிக்கை 4,226 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் இன்று ஒரே நாளில் 3,512 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 10,12,484 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 47,277 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்