பீகாரில் சுவர் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு

பீகாரில் கழிவுநீர் வடிகால் கட்டுமான பணியில் சுவர் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

Update: 2021-03-08 17:52 GMT
ககாரியா,

பீகார் மாநிலத்தில் ககாரியா நகரில் சண்டி தோலா பகுதியில் கழிவுநீர் வடிகால் கட்டுமான பணி நடந்து வந்தது.  இந்த நிலையில், பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது திடீரென சுவர் இடிந்து விழுந்தது.

இதில் சிக்கி கொண்ட தொழிலாளர்களில் 6 பேர் உயிரிழந்தனர்.  பலர் சிக்கி கொண்டனர்.  அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்