பீகாரில் சுவர் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு
பீகாரில் கழிவுநீர் வடிகால் கட்டுமான பணியில் சுவர் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
ககாரியா,
பீகார் மாநிலத்தில் ககாரியா நகரில் சண்டி தோலா பகுதியில் கழிவுநீர் வடிகால் கட்டுமான பணி நடந்து வந்தது. இந்த நிலையில், பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது திடீரென சுவர் இடிந்து விழுந்தது.
இதில் சிக்கி கொண்ட தொழிலாளர்களில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.