மத்திய பிரதேசத்தில் 106 வயது மூதாட்டிக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

மத்திய பிரதேசத்தில் 106 வயதான மூதாட்டி ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Update: 2021-04-10 22:46 GMT
போபால், 

மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்துக்கு உட்பட்ட பில்கோ கிராமத்தைச் சேர்ந்த 106 மூதாட்டி, கம்லி பாய்.

இவருக்கு நேற்று கொரோனா தடுப்பூசி முதல் ‘டோஸ்’ போடப்பட்டது. கம்லி பாயின் ஆதார் அட்டையின்படி, அவர் 1915-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி பிறந்திருக்கிறார்.

தடுப்பூசி செலுத்தியபின் பேசிய மூதாட்டி கம்லி பாய், தான் கொரோனா காலத்தை தாண்டிவர தடுப்பூசி உதவும் என நினைப்பதாக கூறினார்.

மத்திய பிரதேசத்தில் சென்ற வாரம், துல்சாபாய் என்ற 118 வயது மூதாட்டிக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்