குஜராத்தில் இன்று 5,469 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
குஜராத்தில் இன்று 5,469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
காந்திநகர்,
குஜராத் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 5,469 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குஜராத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,47,495 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 54 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் தற்போது 27,568 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக குஜராத் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அங்கு இதுவரை 91,23,719 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.