கொரோனா பரவல் அதிகரிப்பால் உள்நாட்டு விமானங்களில் புதிய கட்டுப்பாடு

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Update: 2021-04-12 12:15 GMT
புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2-வது அலை பரவி வருகிறது. இதனால், நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், உள்நாட்டு விமானங்களில் 2 மணி நேரத்திற்கு குறைவான பயணங்களின்  போது பயணிகளுக்கு உணவு வழங்கப்படாது என்று விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.  2 மணி நேரத்திற்கு கூடுதலாக பயணங்களின் போது முன்கூட்டியே பேக்கிங் செய்யப்பட்ட உணவை பயணிகளுக்கு வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்