மேற்கு வங்காளத்தில் இன்று 6,910- பேருக்கு கொரோனா
மேற்கு வங்காளத்தில் 6,910- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றும் வரும் மேற்கு வங்காளத்திலும் இன்று 6,910-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாநிலத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 43 ஆயிரத்து 795- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 506- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 41,047- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.