கர்நாடகாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,830 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-04-27 16:47 GMT
கோப்புப்படம்
பெங்களூரு,

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை அதி தீவிரமடைந்து வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் இன்றைய கொரோனா பரவல் தொடர்பான விவரங்களை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, கர்நாடகாவில் இன்று புதிதாக 31 ஆயிரத்து 830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 14, 00,775 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 01 ஆயிரத்து 899 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரேநாளில் 10 ஆயிரத்து 793 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், கர்நாடகாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்து 84 ஆயிரத்து 050 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் கொரோனா தாக்குதலால் இன்று ஒரேநாளில் 180 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 807 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் செய்திகள்