உத்தரபிரதேசம்: கிராமங்களில் கொரோனா பரவுவதை தடுக்க வேண்டும் - மாயாவதி வலியுறுத்தல்

உத்தரபிரதேச மாநிலத்தின் கிராமங்களில் கொரோனா பரவுவதை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் மாயாவதி வலியுறுத்தி உள்ளார்.

Update: 2021-05-11 00:25 GMT
கோப்புப்படம்
லக்னோ, 

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

உத்தரபிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்கு பிறகு கிராமங்களில் கொரோனா பரவி வருவதாக இதயத்தை உலுக்கும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதை தடுக்க அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். சமீபத்தில் தேர்தல் நடந்த மாநிலங்களில் கிராமங்களில் கொரோனா பரவலை தடுக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு கூறியபடி ஆக்சிஜன் வினியோகத்துக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்