பெங்களூருவில் மேலும் 33 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

பெங்களூருவில் இதுவரை கொரோனா பாதித்த போலீசாரின் எண்ணிக்கை 1,221 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2021-05-12 03:15 GMT
பெங்களூரு,

பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக போலீசாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 33 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் பெங்களூருவில் கொரோனா பாதித்த போலீசாரின் எண்ணிக்கை 1,221 ஆக உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் 40 போலீசார் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். எனினும் கொரோனாவுக்கு 11 போலீசார் பலியாகி விட்டனர். கொரோனா பாதிப்புக்கு உள்ளான 48 போலீசார் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் 755 பேர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்