அரபிக்கடலில் உருவாகும் புயல் - இந்திய கடலோர காவல் படை எச்சரிக்கை

மீனவர்கள் அருகில் உள்ள துறைமுகங்களுக்கு திரும்ப இந்திய கடலோர காவல் படை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Update: 2021-05-12 17:22 GMT
திருவனந்தபுரம்,

அரபிக்கடலில் புயல் உருவாக இருப்பதால் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப கடலோர காவல் படை அறிவுறுத்தியுள்ளது.  மீனவர்கள் அருகில் உள்ள துறைமுகங்களுக்கு திரும்ப வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும்,  புயல் காரணமாக ஆழ்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் கடலோர காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

14 மற்றும் 15 ஆம்தேதிகளில்  கேரளாவில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்