மராட்டியம்; போலீசாருடன் துப்பாக்கி சண்டையில் 13 நக்சலைட்டுகள் பலி

மராட்டிய மாநிலத்தில் போலீசார் - மாவோயிஸ்டுகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

Update: 2021-05-21 04:59 GMT
கட்சிரோலி,

மராட்டியத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த கட்சிரோலி மாவட்டத்தில், அவர்களின் கொட்டத்தை ஒடுக்க கமாண்டோ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 

இந்த நிலையில், எடப்பள்ளி என்ற இடத்தில் போலீசாருக்கும் - நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் 13  நக்சலைட்டுகள் பலியாகினர். 

மேலும் செய்திகள்