அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு

அசாமில் இன்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவானது.

Update: 2021-05-30 10:36 GMT
புதுடெல்லி,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2.23 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவானது.  

சோனித்பூர் மாவட்டத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை. கடந்த சில வாரங்களில் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்