சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழப்பு

உத்தரப் பிரதேசத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2021-06-02 06:29 GMT
லக்னோ,

உத்தரப் பிரதேச மாநிலம் திக்ரி என்ற கிராமத்தில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் திக்ரி என்ற கிராமத்தில் நேற்று இரவு 10 மணியளவில் நூருல் ஹசனின் என்பவர் வீட்டில் எல்பிஜி சிலிண்டர் திடீரென வெடித்துள்ளது. இதனால் இரட்டை அடுக்குமாடி வீடு மளமளவென இடிந்து விழுந்தது.

இதில் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர், இவர்கள் மேல் சிகிச்சைக்காக லக்னௌவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் நிசார் அகமது (35), ரூபினா பானோ (32), ஷம்ஷாத் (28), சைருனிஷா (35), ஷாபாஸ் (14), நூரி சபா (12), மேராஜ் (11), முகமது ஷோயாப் (2) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ்குமார் மிஸ்ரா கூறுகையில்,

சம்பவம் குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அந்த இடத்தை அடைந்தனர். தடயவியல் குழுக்கள் மாதிரிகளைச் சேகரித்து வருகின்றன, மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, காயமடைந்தவர்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரித்து அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்குமாறு மாவட்ட நீதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்