நடனமாட கூறி குடித்து விட்டு கலாட்ட செய்த மணமகன்; திருமணத்தை நிறுத்திய மணமகள்

மணமகளை நடனமாடும்மாறு கூறி குடித்து விட்டு கலாட்ட செய்த மணமகனால் திருமணத்தை மணமகள் நிறுத்தினார்.

Update: 2021-06-07 12:43 GMT
லக்னோ

உத்தரபிரதேசம்  பிரயாகராஜில் உள்ள பிரதாப்கர் நகரின் திக்ரி கிராமத்தில் ஒரு விவசாயி தனது 22 வயது  மகளுக்கு திருமண ஏற்பாடு செய்து இருந்தார். மணமகன் ரவீந்திர படேல் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் திருமணத்திற்கு வந்து இருந்தார்.

திருமணத்திற்கு முன்  மண்மகளை மணமகன் நடனமாடுமாறு கூறினார். ஆனால் மணமகள் மறுத்து விட்டார். இது மணமகனைத் கோபபடுத்தியது . இதனால் கோபமான மணமகன் தன் நண்பர்கலுடன் சேர்ந்து குடித்து விட்டு வந்து. மணமகள் நடனம் ஆடவில்லை என கலாட்டாவில் ஈடுபட்டார். அவரது நடத்தையால் ஆத்திரமடைந்த அந்த மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார்.

இதை தொடர்ந்து மணமகன் வீட்டார் அங்கிருந்து எஸ்கேப் ஆக எண்ணினர். ஆனால் மணமகள் வீட்டார்  மணமகனையும் அவரது குடும்பத்தினரையும் சிறைபிடித்தனர். உடனடியால போலீசுக்கு தகவல் தெர்விக்கபட்டது மணமகன் திருமணத்திற்காக வாங்கிய பணத்தையும் பரிசு பொருட்களையும் திருப்பி தர சம்மதித்ததை தொடர்ந்து  அவர்கலை மணமகள் வீட்டார்  விடுவித்தனர்.

மேலும் செய்திகள்