ஆந்திர பிரதேசம்: வரும் 1ந்தேதி முதல் ஊரடங்கு தளர்வுகள்; முதல் மந்திரி அலுவலகம் அறிவிப்பு

ஆந்திர பிரதேசத்தில் ஜூலை 1-7 வரையிலான நாட்களில் ஊரடங்கு தளர்வுகள் பற்றி முதல் மந்திரி அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

Update: 2021-06-28 12:02 GMT
விஜயவாடா,

ஆந்திர பிரதேசத்தில் கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை குறைந்த நிலையில், முதல் மந்திரி அலுவலகம் ஊரடங்கு தளர்வுகள் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.

இதன்படி, கொரோனா பாதிப்பு விகிதம் 5%க்கு குறைவாக உள்ள மாநிலத்தின் 8 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஊரடங்கில் தளர்வுகள் அனுமதிக்கப்படும்.

எனினும், இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு தொடரும்.  இரவு 9 மணி முதல் மதுபான விற்பனை கடைகள், உணவு விடுதிகள் மற்றும் பிற கடைகள் மூடப்படும்.  இந்த தளர்வுகள் வருகிற ஜூலை 1ந்தேதி முதல் 7ந்தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்