ஒரே நாளில் 2 சிறுமிகள் கூட்டு பலாத்காரம்: 7 சிறுவர்கள் போக்சோ சட்டத்தில் கைது

ஒரே நாளில் நடந்த இந்த இரு பாலியல் பலாத்கார சம்பவங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2026-01-04 23:49 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் பகுதியை சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். இந்த நிலையில் 3 சிறுவர்கள் கூட்டு சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுபற்றிய புகாரின் பேரில் உப்பள்ளி டவுன் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து 3 சிறுவர்களை கைது செய்தனர்.

அதுபோல் உப்பள்ளி அசோக் நகர் போலீஸ் நிலைய பகுதியிலும் சிறுமியை 4 சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து, அவரை தாக்கியுள்ளனர். மேலும் இதை தடுக்க வந்த சிறுமியின் தந்தையையும் அந்த கும்பல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அசோக் நகர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து 4 சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூருவில் ஒரே நாளில் நடந்த இந்த இரு பாலியல் பலாத்கார சம்பவங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பெற்றோர் தங்களது குழந்தைகளின் நடமாட்டம், செயலை கண்காணிக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் சசிகுமார் அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்