கருப்பு பூஞ்சைக்கு இதுவரை 3,129 பேர் பலி- மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்

கருப்பு பூஞ்சைக்கு இதுவரை 3,129 பேர் பலியானதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-28 21:53 GMT
புதுடெல்லி, 

கொரோனா விவகாரம் தொடர்பான மந்திரிகள் குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்றது. மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

நாட்டில் இதுவரை மொத்தம் 40 ஆயிரத்து 845 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டதாக பதிவாகி உள்ளது. இதுவரை 3 ஆயிரத்து 129 பேர் பலியாகி உள்ளனர். மக்களுக்கு செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கையில், அமெரிக்காவை முந்தி இந்தியா சாதனை படைத்துள்ளது” என்றார்.

மேலும் செய்திகள்