அகிலேஷ் யாதவுக்கு 48-வது பிறந்த நாள்; யோகி ஆதித்யநாத் வாழ்த்து

உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி தலைவருமான அகிலேஷ் யாதவுக்கு நேற்று 48-வது பிறந்த நாள் ஆகும். இதை சமாஜ்வாடி தொண்டர்கள் மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடினர்.

Update: 2021-07-01 18:01 GMT
குறிப்பாக பல இடங்களில் கேக் வெட்டியும், கோவில்களில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டும், சேவைப்பணிகளில் ஈடுபட்டும் தங்கள் தலைவரின் பிறந்தநாளை சிறப்பித்தனர்.அகிலேஷ் யாதவின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு சமாஜ்வாடி தலைவர்கள் நேற்று முன்தினம் பழங்கள் மற்றும் பொருட்களை வழங்கினர். இதற்கிடையே அகிலேஷ் யாதவுக்கு பல்வேறு கட்சித்தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். அந்தவகையில் மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அகிலேஷ் யாதவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது அவர் அகிலேஷின் தந்தையும், சமாஜ்வாடி நிறுவனருமான முலாயம் சிங் யாதவின் உடல்நலன் குறித்தும் கேட்டறிந்தார். உடல் நலக்குறைவு காரணமாக குருகிராமில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் முலாயம் சிங் யாதவ் அனுமதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்