உத்தரகாண்ட் முதல் மந்திரி ராஜினாமா; கவர்னருக்கு கடிதம் வழங்கினார்

உத்தரகாண்ட் முதல் மந்திரி தீரத் சிங் ராவத் கவர்னரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தினை வழங்கியுள்ளார்.

Update: 2021-07-02 18:25 GMT

டேராடூன்,

உத்தரகாண்டில் முதல் மந்திரியாக பதவி வகித்து வந்தவர் தீரத் சிங் ராவத்.  இந்நிலையில், அவர் டேராடூனில் உள்ள ராஜ் பவனில் கவர்னர் பேபி ராணி மவுரியாவை இன்றிரவு நேரில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பில் அவர் தனது ராஜினாமா கடிதத்தினை வழங்கியுள்ளார்.  அவரது இந்த திடீர் ராஜினாமா கட்சியினரிடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்