ஆந்திராவில் மேலும் 2,498- பேருக்கு கொரோனா தொற்று

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,498- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-07-21 17:43 GMT
அமராவதி,

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,498- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 2,527- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில்  19 பேர் உயிரிழந்துள்ளனர்.  

ஆந்திராவில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 23,939-ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 19 லட்சத்து 09 ஆயிரத்து 613- ஆக உள்ளது. ஆந்திராவில் இதுவரை  கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13,197- ஆக உள்ளது. 

மேலும் செய்திகள்