உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு - கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு

உடல் உறுப்புகளை தானம் செய்ய பதிவு செய்துள்ளதாக கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

Update: 2021-08-13 20:51 GMT
பெங்களூரு,

உலகம் முழுவதும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி உடல் உறுப்புகளை தான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தையொட்டி நேற்று கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

“மண்ணோடு மண்ணாக கலந்துவிடும் நமது உடல் உறுப்புகளை தானம் செய்தால், அது இன்னொரு உயிரை காக்க உதவும். அதனால் நான் எனது உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்து உள்ளேன். அதற்காக எனது பெயரை பதிவு செய்கிறேன். நாம் அனைவரும் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதிமொழி ஏற்க வேண்டும்.”

இவ்வாறு பசவராஜ் பொம்மை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்