ஆந்திரா, ஒடிசா மாநில கொரோனா பாதிப்பு நிலவரம்

ஆந்திராவில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

Update: 2021-09-10 12:32 GMT
புவனேஷ்வர், 

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,608-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 1,107- பேர் குணம் அடைந்த நிலையில், 6 பேர் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். தொற்று பதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மாநிலத்தில் அதிகபட்சமாக சித்தூர் மாவட்டத்தில் 281 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல், ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 745 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பால் மேலும்  6 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 66,106- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்றுபாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 7,087 ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து  இன்று 694- பேர் குணம் அடைந்துள்ளனர். 

மேலும் செய்திகள்