ஜம்மு காஷ்மீரின் கலாசாரத்தை உடைக்க ஆர்.எஸ்.எஸ், பாஜக முயற்சி: ராகுல் காந்தி விமர்சனம்
இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நேற்று ஜம்மு காஷ்மீர் சென்றார்.
ஜம்மு,
இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நேற்று ஜம்மு காஷ்மீர் சென்றார். தனது சுற்றுப்பயணத்தின் 2-வது நாளான இன்று கட்சி நிர்வாகிகளுடனான கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
காஷ்மீர் வருவது எனக்கு சொந்த வீட்டிற்கு வருவது போல் உள்ளது. எனது குடும்பத்திற்கும், காஷ்மீருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.உங்கள் மத்தியில், அன்பு, சகோதரத்துவம், கலப்பு கலாசாரம் நிலவி வருகிறது.
இந்த கலாசாரத்தை உடைக்க வேண்டும் என பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் நினைக்கின்றன. உங்கள் அன்பு மற்றும் சகோதரத்துவம் மீது தாக்குதல் நடத்துகின்றன. நீங்கள் பலவீனமடைந்ததன் காரணமாக மாநில உரிமையை மத்திய அரசு பறித்து கொண்டது” என்றார்.