ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் பெரு மழை ; 4 பேர் பலி

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபர் பகுதியில் மேக வெடிப்பால் பெருமழை கொட்டி தீர்த்தது.

Update: 2021-09-12 09:20 GMT
ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரின் பரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபர் பகுதியில் சனிக்கிழமை இரவு மேக வெடிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பெருமழை கொட்டி தீர்த்தது.  இதில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேலும் ஒருவரை காணவில்லை.  மாயமான 80-வயது முதியவரான முகம்மது பஷிர் காரி என்ற நபரை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்