இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,254-பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,254-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-09-13 04:28 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,254-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில்  இருந்து மேலும் 37,687- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 219- பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சத்து 64 ஆயிரத்து 175 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 74 ஆயிரத்து 269 ஆக உள்ளது. 

கொரோனா தொற்றில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 24 லட்சத்து 47 ஆயிரத்து 032 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 42 ஆயிரத்து 874- ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் செய்திகள்