அசாமில் மேலும் 444 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

அசாம் மாநிலத்தில் மேலும் 444 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-09-16 03:34 GMT
கவுகாத்தி,

அசாமில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, அசாமில் மேலும் 444 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 96 ஆயிரத்து 606 ஆக அதிகரித்துள்ளது.
 
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 ஆயிரத்து 49 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 706 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், அசாமில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 85 ஆயிரத்து 435 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தாக்குதலுக்கு மேலும் 8 பேர் உயிரிழந்தனர். இதனால், அசாமில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 775 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் செய்திகள்