டெல்லியில் சுற்றுலா, சுரங்க தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் அறிவிப்பு
டெல்லியில் கொரோனாவால் வருவாய் இழந்த சுற்றுலா, சுரங்க தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என முதல்-மந்திரி அறிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா 2வது அலையில் அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட்டன. இதனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொழில்கள் முடங்கின. இதில் டெல்லியும் தப்பவில்லை. இதனை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன.
இந்த சூழலில், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, டெல்லியில் கொரோனாவால் சுற்றுலா சார்ந்த தொழிலில் ஈடுபட்ட குடும்பத்தினர் வருவாய் இழந்துள்ளனர். இதனால், அவர்கள் தொழில் மீண்டும் தொடங்கும்வரை அவர்களின் குடும்பங்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
இதேபோன்று, சுரங்கங்கள் மூடப்பட்டு, சுரங்க தொழிலாளர்களும் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், அவர்களுக்கும் மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்.