ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடர்பு - அரசு ஊழியர்கள் 6 பேர் பணி நீக்கம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக 6 அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2021-09-22 11:29 GMT
ஸ்ரீநகர், 

பயங்கரவாதிகளுக்கு தேவையான சில  வேலைகளை செய்துகொடுத்ததால், அவர்களை பணிநீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் இருவர் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

குறிப்பிட்ட கால இடைவெளியில் அரசு ஊழியர்களின் நடத்தைகள் பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று யூனியன்பிரதேச அரசு உத்தரவிட்ட சில நாட்களில், அரசு ஊழியர்கள் 6 பேர் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்