மும்பை: ஓராண்டில் ரூ.150 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்
மும்பை மண்டலத்தில் கடந்த ஓராண்டில் ரூ.150 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
மும்பை,
மராட்டியத்தின் மும்பை மண்டல போதை பொருட்கள் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வெளியிட்டு உள்ள செய்தியில், கடந்த ஓராண்டில் ரூ.150 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 300 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை 12 கிலோ ஹெராயின், 350 கிலோ கஞ்சா மற்றும் 25 கிலோ எம்.டி. வகையை சேர்ந்த போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.