கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,983 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,983 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்,
நாடு முழுவதும் கொரோனா 2வது அலையில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டன. எனினும், சமீப நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன. இந்த நிலையில், கேரளாவில் தொடர்ந்து எண்ணிக்கை அதிகரித்த நிலையிலேயே காணப்பட்டன.
இந்த சூழலில், கேரள சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,983 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,09,530 ஆக உயர்ந்து உள்ளது.
ஒரே நாளில் 15,054 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். 1,62,846 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 127 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு 24,318 ஆக உயர்வடைந்து உள்ளது என தெரிவித்து உள்ளது.