ஒவ்வொருவரின் வாழ்விலும் நலமும், வளமும் வரட்டும்; பிரதமர் மோடி நவராத்திரி வாழ்த்து

நவராத்திரி திருவிழா ஒவ்வொருவரின் வாழ்விலும் நலமும், வளமும் கொண்டு வரட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

Update: 2021-10-07 03:40 GMT
புதுடெல்லி,

நவராத்திரி திருவிழா இன்று தொடங்கி வருகிற 15ந்தேதி வரை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.  இதனை முன்னிட்டு துர்க்கை வழிபாடு மற்றும் விரதங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நவராத்திரி திருவிழா வாழ்த்து தெரிவித்து உள்ளார்.  இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஒவ்வொருவருக்கும் நவராத்திரி திருவிழா வாழ்த்துகள்.  வருகிற நாட்களில், ஜனனி மாதாவை பக்தியுடன் நாம் வழிபட வேண்டிய நாட்கள் வர இருக்கின்றன. 

இந்த நவராத்திரி திருவிழா ஒவ்வொருவரின் வாழ்விலும் வலிமை, நல்ல ஆரோக்கியம் மற்றும் வளம் ஆகியவற்றை கொண்டு வரட்டும் என வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று, துர்க்கை கடவுளை வழிபடுவது போன்ற புகைப்படம் ஒன்றையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.

மேலும் செய்திகள்