பல பிரச்சினைகளுக்கு இடையே பிரதமர் மோடி தேசத்திற்கு சேவை செய்து வருகிறார் - மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி
பல பிரச்சினைகளுக்கு இடையே பிரதமர் மோடி தேசத்திற்கு சேவை செய்து வருகிறார் என மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி புகாழாரம் சூட்டியுள்ளார்.
புதுடெல்லி,
இது குறித்து மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி கூறியதாவது:-
“ 20 ஆண்டுகளுக்கு முன்பு மோடி குஜராத் முதல்-மந்திரியாக பதவியேற்றபோது, குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி உலகம் முழுவதும் அறியப்படும் என்று அவர் மக்களுக்கு வாக்குறுதி அளித்தார்.
அதன்படி குஜராத்த்தை உலகம் அறிய வளர்ச்சியின் அடையாளமாக மாற்றியதை பார்த்து, இந்திய மக்கள் அவரை பிரதமராக்கினர்; பல பிரச்சினைகளுக்கு இடையே தேசத்திற்கு சேவை செய்து வருகிறார் ” என தெரிவித்தார்.